×

ஊட்டி பேன்ட் லேன் செல்லும் சாலையில் கழிவுநீர் செல்வதால் மக்கள் அவதி

ஊட்டி : ஊட்டி பேன்ட் லேன் செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பேன்ட்லேன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையில் கேசினோ சந்திப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. மேலும், இப்பகுதியில் எந்நேரமும் சாலையில் கழிவுநீர் ஓடுவதால், சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், சில சமயங்களில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனை சீரமைக்க இப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பேன்ட்லேன் செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள கழிவு நீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Ooty Band Lane , Ooty: The public has been affected due to health problems due to sewage running on the road leading to the Ooty Band Lane. Ooty
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...