சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் சிறைகளில் சிறைவாசிகளின் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் தொலைபேசி, மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதி வழங்கப்படும். சிறைகளுக்கு 58 மொபைல் போன்கள் வழங்கப்பட்டு உள்ளன என தமிழ்நாடு சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.