×

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் பூஜை செய்வதா!: கரூர் அருகே பரிகாரபூஜை செய்ய வந்த ஜோதிடர் மீது 5 பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதல்..!!

கடலூர்: கொடுமுடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் பரிகார பூஜை செய்வதாக இழிவுபடுத்தி தாக்குதல் நடத்தியதாக காயங்களுடன் அரசு மருத்துவமனையில் ஜோதிடர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் பழனிமுத்து. இவர் தனக்கு தெரிந்த நபர்களை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு அழைத்து சென்று அங்குள்ள பரிகார மையத்தில் பூஜைகள் செய்திருக்கிறார். அதன்பின் பழனிமுத்துவை பரிகார மையத்தை சேர்ந்தவர்கள் சொலிக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சாப்பிட அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ரத்த காயங்களுடன் தப்பிவந்த பழனிமுத்து கரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்ததால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் பரிகாரபூஜை செய்வதா என்ற ஆத்திரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றதாகவும் பழனிமுத்து புகார் அளித்துள்ளார். இதனிடையே முதலில் காயங்களுடன் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனிமுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Pooja ,Parakarapuja ,Karur , Oppressed community, parikarapuja, astrologer, attack
× RELATED சுந்தரேஷ்வர சுவாமி கோயில்...