×

கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை : ஒன்றிய அரசு அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி!!

டெல்லி : கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக ஏதாவது திட்டம் உள்ளதா என்றும் அவ்வாறு திட்டம் இல்லாத பட்சத்தில் அதற்கான காரணங்கள் வேண்டும் என்றும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாகவும் மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும் அவர் வினவி இருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி,  நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டார்மேலும், திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும்.மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நீட் தேர்வு நடக்கும். கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 12ல் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது.

Tags : Corona ,US government , நீட்
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...