திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 4,860 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 85.01 அடியாக உயர்ந்துள்ளது.