×

ரவுடியை மீட்டு சிறையில் அடைத்த போலீசார்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் என்கின்ற புவனேஸ்வர் (20). இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை எம்கேபி நகர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முல்லை நகர் அருகே இவரை எம்கேபி நகர் போலீசார் பிடிக்க முற்பட்ட போது அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில விழுந்து தப்பிக்க முயன்றார். இதனையடுத்து கழிவுநீர் கால்வாயில் இறங்கிய எம்கேபி நகர் போலீசார் அவரை மீட்டு  சிறையில் அடைத்தனர்.


Tags : Rowdy , Rowdy, prison, police
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...