சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து, அளித்த கோரிக்கையில், திருவனந்தபுரம் கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை, நாளை (இன்று) முதல் 31 வரை நடத்துகிறது. தமிழ்நாட்டின் மதுரை கோட்டமும், இதில் இடம் பெறும் நிலையில், இங்கு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை.எனவே, இந்த தேர்வை ஒத்தி வைப்பதுடன், தமிழகத்தில் இதற்கான தேர்வு மையங்கள் அமைத்து, பின்னர் தேர்வை நடத்த ஆவன செய்ய வேண்டும்.