×

சேலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - அதிகாரிகள் மீது வழக்கு

சேலம்: சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. சேலம் குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உதவிப்பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகுதியற்ற பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில் பணம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

Tags : Salem , pradhan mantri awas yojana, tamilnadu
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...