×

ஒன்றிய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை இன்று முற்றுகை: மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஒன்றிய அரசை கண்டித்து, கவர்னர் மாளிகையை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இந்திய தேசிய காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட பாஜ அரசை கண்டித்து 22ம் தேதி (இன்று) காலை 9.30 மணியளவில் சைதாப்பேட்டை ராஜிவ் காந்தி சிலை அருகில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி மற்றும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து நகர, வட்டார, சர்க்கிள் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பேரணியில் கலந்துக் கொண்டு முற்றுகை போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Governor ,House ,United ,States ,District ,Congress ,President , Governor's House siege today condemning the United States: District Congress President's announcement
× RELATED மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள்...