×

ஆடி துவாதசி பெருமாள் பாதத்துக்கு சிறப்பு பூஜை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை மீது பெருமாள் பாதம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத துவாதசி அன்று நாராயணகிரி மலையில் அமைந்துள்ள பெருமாள் பாதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று பெருமாள் பாதத்திற்கு பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பாத தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Tags : Audi , Special Puja for the feet of Audi Duvatasi Perumal
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...