டெல்லி: பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்ப்பு புகார் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகம் உட்பட அரசின் உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. உளவு பார்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.