×

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ40 லட்சம் தங்கம் பறிமுதல்: வாலிபர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.40.35 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது விழுப்புரத்தை சேர்ந்த சந்துரு சக்திவேல் (23) என்பவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 பார்சல்களில் தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.40.35 லட்சம். இதையடுத்து சந்துரு சக்திவேலை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dubai ,Chennai , 40 lakh gold smuggled from Dubai to Chennai seized
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...