×

கிருஷ்ணகிரி- திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தீவிரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி -திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் வரையிலான 180 கி.மீ., தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையை(என்.எச் 66) இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு மாற்றத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து. குண்டும்- குழியுமான புழுதி பறக்கும் இச்சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரி முதல் சிங்காரப்பேட்டை வரை உள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைத்தும், மழை காலங்களில் மீண்டும் குண்டும்- குழியுமாக மாறி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பலர் இச்சாலையை புறக்கணித்து மாற்றுச்சாலையில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சாலை விரிவாக்க பணிகள் இரண்டாக பிரித்து மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம், கிருஷ்ணகிரி செல்லகுமார் எம்.பி., கோரிக்கை விடுத்தார். அதன்படி, பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கொரோனா ஊராடங்கால் பாதிக்கப்பட்டது.
தற்போது கடந்த ஒரு மாதமாக சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலை விரிவாக்க பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : National Highway ,Krishnagiri ,Tindivanam , Krishnagiri, Tindivanam, Road extension, national highways
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...