புதுடெல்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு அடுத்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் (76) உள்ளார். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவரான இவரது சொத்து மதிப்பு சுமார் 23.5 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் அவர் ராஜினாமா செய்தார். இருப்பினும், நிறுவனத்தின் ஆலோசகராக 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார். நிறுவன தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.விஜயகுமார், நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.