×

சூறைக்காற்றுடன் பலத்த மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஏர்ஏசியா விமானம் 61 பயணிகளுடன் நேற்றிரவு 10.45 மணிக்கு சென்னைக்கு வந்தது. அப்போது சூறைக்காற்று அதிகமாக மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க முடியவில்லை. சிறிது நேரம் வானில் வட்டமடித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.

பின்னர் அந்த விமானம், இன்று அதிகாலை 1 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தது. அதைப்போல் சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூர் செல்ல வேண்டிய 2 பயணிகள் விமானங்கள், ஐதராபாத், பெங்களூர், ஹாங்காங் செல்ல வேண்டிய 3 சரக்கு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags : Chennai , Heavy rain with storm
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...