×

குமரியில் அதிமுக கூடாரம் காலி: கூண்டோடு திமுகவில் இணைகிறார்கள்

நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுக கூடாரம் காலியாகிறது. முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று மாலை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும், குமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசுவாமி, ேதாவாளை ஒன்றிய அவைத்தலைவர் மோசஸ் ராமச்சந்திரன், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன் என்ற சுதாகர்,

தோவாளை வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயந்தி, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கலை இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் டொமினிக், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வரதராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரை அதிமுகவில் இருந்து நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தோவாளை ஒன்றியத்தில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமரியில் அதிமுக கூடாரம் காலியாகி விட்டதாக தெரிகிறது.

Tags : Kumari ,Dimu , AIADMK tent emptied in Kumari: Join DMK in cage
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து