×

லாரி மோதி பெண் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தாரணி(23), வேலப்பன்சாவடியில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்ல மொபட்டில் புறப்பட்டார். பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டு சாலை அருகே சென்றபோது பள்ளத்தில் நிலை தடுமாறி கீழேவிழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மொபட்டில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் தாரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரகாஷ்(32), லாரி டிரைவரை கைதுசெய்தனர்.

Tags : Larry , Woman, killed
× RELATED லாரி மோதி மாணவர் பலி