×

'பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க'!: தமிழில் பதவியேற்றார் குமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த்..!!

டெல்லி: கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையடுத்து மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்வசந்த், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் குருமூர்த்தி, பாஜகவின் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல். கட்சியின் அப்து சமாத் சமதான் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த விஜய்வசந்த் தமிழில் பதிவியேற்றுக்கொண்டார்.

பதவிப்பிரமானத்தில் அவர் கூறியதாவது, கன்னியாகுமரி தொகுதி மக்கள் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பெற்ற ஹரிகிருஷ்ணபெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜயகுமார் என்கிற விஜய்வசந்த் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க என்று கூறினார்.


Tags : Kamaraj ,Rajiv Gandhi ,Kumari Lok Sabha ,Vijayvasanth ,Tamil , Chief Kamarar, Rajiv Gandhi, Tamil, Vijayvasant
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...