×

குரோம்பேட்டையில் பரபரப்பு அரிசி கடை உரிமையாளர் படுகொலை: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை : தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, சேம்பர்ஸ் காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (46). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு  கிருஷ்ணராஜ், அசோக் ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தராஜ் குரோம்பேட்டை, சி.எல்.சி சாலையில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல கடையை திறக்க வந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆனந்தராஜ் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ்  ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து, குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்தராஜை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Crompton , Chrompet, stir, rice shop owner, assassination
× RELATED பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில்...