லண்டன்:இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சர் சஜீத் ஜாவீத். இவர் கடந்த மார்ச் 17ம் தேதி அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டார். தொடர்ந்து, மே 16ம் தேதி 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். இந்நிலையில், கடந்த ஓருசில நாட்களாக அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவருக்கு தொற்று உறுதியானதால், பிரதமர் போரிஸ் ஜான்சனும் நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.