பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதன் பிறகு, எடியூரப்பா கூறுகையில், ‘‘நாளை முதல் (இன்று) 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், மதுபானம் விற்கப்படம் பப்கள் செயல்படுவதற்கு அனுமதியில்லை. கல்லூரிகள் 26ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மாணவ மாணவிகள் வரவேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றார்.