×

ஸ்பெயினியில் இருந்து போதை மாத்திரைகள் கடத்திய ஓவியர்கள் கைது

சென்னை: ஸ்பெயினிலிருந்து சரக்கு விமானத்தில் சென்னை வந்த ஒரு கூரியர் பார்சலை சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது, 994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.56 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர். பார்சலில் இருந்த புதுச்சேரி ஆரோவில் முகவரிக்கு தனிப்படையினர் சென்றபோது, திருநெல்வேலியை சேர்ந்த ரூபக் மணிகண்டன் (29), லாய் விகூஸ் (28) ஆகிய இருவர் இருந்தனர். அந்த அறையை சோதனையிட்டபோது, 5.5 கிலோ கஞ்சா இருந்தது. ஓவியரான அவர்கள் போதைப் பொருட்களை கடத்தி விற்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து ரூ.58.5 லட்சம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Tags : Spain , Painters arrested for smuggling drugs from Spain
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...