சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளிகள் மூலம் பிழைகள் இல்லாமல் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.