×

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும்: பிரதமர்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Parliamentary session will be constructive: Prime Minister
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...