×

தமிழறிஞர் தீப.நடராசன் மறைவு: வைகோ இரங்கல்

சென்னை: தமிழறிஞர் தீப.நடராசன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பழுத்த இலக்கியவாதியும், ரசிக மணி டி.கே.சி. செல்லப்பேரனுமான, தீப.நடராசன் என்ற சிதம்பரநாதன் (92) இயற்கை எய்தியதை அறிந்து வருந்துகிறேன்.தென்காசியில், ‘ஜோதி பிரம்ம ஞான சங்கம்’ என்ற அமைப்பை, தமது இல்லத்தில் இரண்டாவது சனிக்கிழமைதோறும் நடத்தி வந்தார். அவரனைய இலக்கியவாதிகள், அங்கே கூடி, தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ரசிகமணியின் பாரம்பரியத்தை, இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் பங்காற்றினார். ‘தென்காசி திருவள்ளுவர் கழகம்’, ‘மூத்த குடிமக்கள் மன்றம்’ ஆகியவற்றில், முதன்மையாக வைத்துப் போற்றப்பட்டார். கி.ரா.வோடு, நெருங்கிய நட்பும், கடிதப் போக்குவரத்தும் கொண்டு, கடித இலக்கியக் களஞ்சியமாக, எழுதிக் குவித்துள்ளார். பழம்பெரும் பாரம்பரியத்தின் அடையாளமாக, தம்முடைய இல்லத்திற்கு ‘பஞ்சவடி’ எனப் பெயர் சூட்டி இருந்தார். தமிழ் அறிஞர் தீப.நடராசன் மறைவுக்கு, மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழறிஞர் தீப.நடராசன் மறைவு: வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Natarasan ,Chennai ,Vigo ,President of the General Secretary of State ,Vaiko ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...