×

தமிழகத்தில் 21-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மாலை முதல் மழை வெளுத்து வாங்கியது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மாநிலத்தில் 21-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center , Widespread rains in Tamil Nadu till 21st: Meteorological Department
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...