×

உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்கு பிணை வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு உயர்அதிகாரக் குழு ஒன்றை அமைத்தது. சிறைத்துறை டிஜிபி, உள்துறை இணை செயலர், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா தலைமையில் மே  19ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கைதிகளுக்குப் பிணை வழங்குவதுகுறித்து 9 பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு அளித்தது.

ஆனால், அதன்படி எவருக்கும் இதுவரை பிணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனிடையில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் மேலும் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. பிணை வழங்குவதில் கைதியின் வயது, அவருக்குள்ள இணை நோய்களின் விவரம் ஆகிய அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.ஏற்கனவே தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள கைதிகள் நூற்றுக் கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படடுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, இதில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக தகுதியான கைதிகளுக்குப் பிணை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Bind , Supreme Court, Prisoner, Thirumavalavan
× RELATED மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்;...