×

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா துவங்கியது

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா 2வது அலை காரணமாக இந்த ஆண்டு பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்படுகிறது. நேற்று காலையில்  கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா துவங்கியது. மாலை 7 மணியளவில்  பெருமாள் புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஜூலை 22ம் தேதியும், வெள்ளி தேரோட்டம் ஜூலை 24ம் தேதியும் நடைபெறும். திருவிழா  காலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நேரங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் செயல்  அலுவலர் மாலதி தெரிவித்தார்.

Tags : Audi Festival ,Beard Horn Saundaraja Perumal Temple , The Audi Festival started at the Beard Horn Saundaraja Perumal Temple
× RELATED பரந்தூர் விமான நிலையத்துக்கு...