×

கொடைக்கானல் ஏரியில் படகு சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்: தமிழகத்தில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் இயற்கை கொஞ்சும் அழகினை காண சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். மேலும் நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதையும் சுற்றுலா பயணிகள் தவறவிடுவதில்லை. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர்.

எனினும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடப்பதால் இயற்கை அழகினை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல் ஏரியில் படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருக்கும் படகுகளும் சேதமடைந்து வருகிறது. எனவே தமிழக அரசு, கொடைக்கானல் ஏரியின் நகராட்சி, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு குழாம்களில் விதிமுறைகளை பின்பற்றி படகு சவாரிக்கு அனுமதிப்பதுடன், சுற்றுலா தலங்களையும் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், சுற்றுலா தொழில்புரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Coroner Lake , Permission for boat service on Kodaikanal Lake: Tourist request
× RELATED தொடர் மழையால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்