×

மடத்துக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

உடுமலை: மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவர் காவியா ஐயப்பன் தலைமை தாங்கினார்.ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஒன்றியத்துக்குட்பட்ட 3 ஊராட்சிகளில் கழிவு நீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட 77 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாமிதுரை,பாலசெந்தில்,மகாலட்சுமி பெரியசாமி, நாகலட்சுமி கலியமூர்த்தி, தீபிகா முருகானந்தம்,நதீரா கண்ணாடி பாபு,திவ்யபாரதி ராஜேஷ்மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ்(நிர்வாகம்),சதீஸ்குமார்(மண்டலம்), உதவிப் பொறியாளர்கள் கார்த்திக் குமார்,கார்த்திக்  ஜா,எத்திராஜ்(தணிக்கை), சீனிவாசன்(மண்டலம்), சாந்தி(மண்டலம்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவேகானந்தம்(சத்துணவு), நாகலிங்கம்(ஊராட்சிகள்), ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Cultural Union Committee Meeting ,Monastery , Panchayat Union Committee meeting at Madathukulam
× RELATED தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து...