×

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை சடலத்தை 1 கி.மீ. தூரம் சுமந்து சென்ற பெண் போலீஸ்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் மகன் கோகுல்நாத்(18).  இவர் ஓசூர் பகுதியில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் நேற்று அவரது ஆம்பூர் ரயில்நிலையம் அருகே உள்ள பச்சகுப்பம் பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏட்டு உஷாராணி மற்றும் போலீசார் கோகுல்நாத்தின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் சடலத்தை அவசர அவசரமாக தூக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தலைமை பெண் காவலர் உஷாராணி, இறந்த கோகுல்நாத் உறவினர்களுடன் சேர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 1 கி.மீ தூரம் வரை சடலத்தை போர்வையால் சுற்றி சுமந்து வந்தார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Train, walker, suicide, female police
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...