கோவை: கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் ஒப்புகை சீட்டு இந்தியிலேயே அச்சடிக்கப்பட்டு வெளிவருகிறது. இந்தி தெரியாதவர்களுக்கு தங்களது கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது? என்ற விபரம் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் வங்கியை வைத்துக்கொண்டு இந்தியில் ஒப்புகை சீட்டு வழங்குவது கண்டத்திற்குரியது. இந்தியன் வங்கி நிர்வாகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.