×

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 4 பேர் பதவியேற்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 4 பேர் நேற்று பதவியேற்று ெகாண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன், பேராசிரியர் க.ஜோதி சிவஞானம், முனைவர் க.அருள்மதி, ஆ.ராஜ் மரியசூசை ஆகியோரை கடந்த 13ம் தேதி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  இந்த நிலையில் புதிய உறுப்பினர்கள் 4 பேரும் நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தேர்வாணையத்தின் தலைவர் கா.பாலசந்திரன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். நிகழ்வின் போது தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா மற்றும் தேர்வாணைய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Tags : DNPSC , DNPSC, Members, Inauguration
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்