×

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாட்ச்மேன் கைது

அண்ணாநகர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜகன் (44, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்துடன், கடந்த ஞாயிறன்று சென்னை அண்ணாநகரில் வசிக்கும் தனது அக்காவின் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை ஜகனின் 10 வயது மகள் மற்றும் 12 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது இவர்களது வீட்டின் அருகே ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, 10 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ஜகனின் மகன் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த வாட்ச்மேன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது பெற்றோரிடம் நடந்தவற்றை சிறுமி அழுதபடி கூறியிருக்கிறாள்.

புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் அதே பகுதியில் மறைந்திருந்த வாட்ச்மேனை பிடித்து, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (59) என்பது தெரியவந்தது. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Watchman , 10-year-old girl sexually harassed: Watchman arrested
× RELATED உழைத்தபடி படித்து சாதித்தார் இரவு...