×

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கே வெற்றி கிடைக்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த அனைத்துக்கட்சி குழவினர், மேகதாது பகுதியில் அணைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கியதோடு, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அனைத்து கட்சி குழுவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார். இதற்காக அவர், இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி மத்திய ஜல்சக்தி மந்திரியை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. தமிழக விவசாயிகள், மக்கள் நலனை கருதி, தமிழக அரசு எடுக்கின்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு உண்டு. காவிரி பிரச்சனையில் ஜீவாதார உரிமையை கட்டிகாத்து முழுமையாக பெற்றது அதிமுக அரசு. அதைபோல் திமுக அரசும் சரியான பாதைக்கு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்.மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கே வெற்றி கிடைக்கும்,என்றும் தெரிவித்துள்ளார். 


Tags : Tamil Nadu ,Megha Dadu ,Jayakumar , ஜெயக்குமார்
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...