ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ராணுவ ஆவணங்களை வைத்திருந்த பாகிஸ்தான் உளவாளி ஹபீப்கான் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உளவு பார்க்கும் தகவல் கிடைத்தை தொடர்ந்து சிறப்பு போலீஸ் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காய்கறி வியாபாரம் செய்து வந்த ஹபீப்கான் ராணுவ நிலையங்களுக்கு காய்கறிகளை விநியோகித்து வந்துள்ளார்.