×

இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க மிரட்டல்!!

நாமக்கல் : இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்றும் பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 6 மாதத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மாநில தலைவரே மிரட்டல் விடுத்து இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக முருகன் இருப்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளதால் எல்.முருகனுக்கு ஒன்றிய அரசு இணை அமைச்சர் பதவியை கொடுத்ததே உள் நோக்கம் கொண்டதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Tags : President of the Bjaka State Annalayka , அண்ணாமலை
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...