×

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பா ?: 22ல் உச்சநீதிமன்றம் முடிவு!!

புதுடெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் காலத்தை நீட்டிக்க கோரிய மனு வருகிற 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கொரோனா 2வது ஆலையின் ஆரம்பத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முழுவதையும் ஒன்றிய அரசிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த அனுமதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டித்து வழங்க வேண்டும்,’ என  கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி நரிமன்  தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான வேதாந்தா தரப்பு வழக்கறிஞர்கள், ஸ்டெர்லைட் தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேற்கண்ட வழக்கு வருகிற 22ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.



Tags : Supreme Court , ஆக்சிஜன்
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...