×

பிரிட்டனில் ஆப்ரிக்க இளைஞர் ஒருவரை பிரம்பால் சரமாரியாக அடித்து உதைக்கும் காவலர் : இணையத்தில் வெளியான காணொலியால் பரபரப்பு!!

வேல்ஸ் : பிரிட்டனில் காவலர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஆப்ரிக்கன் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள நியூபோர்ட் நகரில் வழக்கு தொடர்பாக ஆப்ரிக்க இளைஞர் ஒருவரை குவன்ச் நகர காவலர் கைது செய்தார்.கைவிலங்கிட்டு அழைத்து செல்லும் போது, இளைஞரை கையாலும் தடியாலும் சரமாரியாக அடிக்கும் காட்சிகள் வெளியாகி பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளியில் இளைஞரை விட்டுவிடுமாறும் தாக்க வேண்டாம் என்றும் பெண் ஒருவர் கெஞ்சுவது பதிவாகி இருக்கிறது. மேலும் காவலர் தாக்குவதை கண்டு குழந்தைகள் அச்சப்பட்டு அலறும் ஒலிகளும் பதிவாகி இருக்கின்றன.இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குவின்ச் காவல்துறை தற்போது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இது அமெரிக்காவில் ஆப்ரிக்க இளைஞர் ஜார்ஜ் பிளாயிட் போலீசாரால் மிதித்து கொல்லப்பட்ட நிகழ்வுகளை ஒத்து இருப்பதாக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். ஆப்ரிக்க இளைஞரை தாக்கிய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டன் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.


Tags : UK , கைது
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...