×

மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவருக்கு வலை

புழல்: சோழவரம் அருகே எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன் தினம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனையடுத்து,  நேற்று முன் தினம் மாலை, சோழவரம் எஸ்எஸ்ஐ கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது,  அங்கு ஒரு லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும், மணல் அள்ளிய கூலி தொழிலாளர்கள்,  லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர்,  அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கொள்ளையர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். எருமைவெட்டிபாளையம், சோழவரம், காரனோடை, புதுப்பாக்கம் பகுதிகளில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. இவற்றை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Sand smuggling, truck seizure, driver
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...