×

மீஞ்சூர் அருகே மீன் பண்ணையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை: கணவன் மனைவி கைது

பொன்னேரி:  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு கிராமத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணி என்பவர் மீன் பண்ணை நடத்தி வருகிறார். அங்கு திருவேலங்காடை சேர்ந்த பூங்காவனம் (26), அமுதா (21) என்ற கணவன் மனைவி இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்கின்றனர்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வாலிபர் ஒருவர் அமுதாவிடம் தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் பூங்காவனம், அந்த வாலிபரை அடித்துக்கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் அவ்வழியாக வந்த பலர் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்துகிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர். கிராம நிர்வாக அதிகாரி பாபு, மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல், முருகன். எஸ்.ஐ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத வடமாநில வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார்  அமுதாவிடம் விசாரித்தனர். அப்போது அமுதா நடந்ததை கூறியதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கணவனையும் அமுதாவையும் கைது செய்தனர்.   இறந்தவர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Tags : Minsur , Minsur, Fish Farm, Northern Valley, Beaten
× RELATED மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம்