×

மாமல்லபுரம் அருகே பரபரப்பு திடீரென தீப்பற்றி எரிந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் வழியாக கூவத்தூர் நோக்கி சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.  சென்னை கேகே நகரை சேர்ந்தவர் மணிமாறன் (59). இவருக்கு சொந்தமாக கூவத்தூர் அடுத்த பரமன்கேணியில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கு செல்வதற்காக இவரது அக்கா, மாமா ஆகியோருடன் நேற்று காலை மணிமாறன் காரில் புறப்பட்டார்.  காரை மணிமாறன் ஓட்டி சென்றார். இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் புகை வந்தது. இதை பார்த்ததும், மணிமாறன் காரை சாலையோரத்தில் நிறுத்தினார்.

3 பேரும், கீழே இறங்கினர். சிறிது நேரத்தில், காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதை காண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர். அதில் காரின் முன் பகுதி மட்டும் எரிந்து நாசமானது. காரில் பயணித்த 3 பேரும் கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் தீப்பற்றி எரிந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Mamallapura , Mamallapuram, fire, car, survivors
× RELATED மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம்...