×

முன்னாள் மாணவர் பேரவையின் சிறப்பு மலர் வெளியிட்டு விழா

செங்கல்பட்டு: சூனாம்பேடு அரசு பள்ளியில், முன்னாள் மாணவர் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு மலர் வெளியிட்டு விழா நடந்தது.  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே சூனாம்பேடு அரசு பள்ளி முன்னாள் மாணவர் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு மலர் வெளியிட்டு விழா செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகி சூ.க.விடுதலை செழியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விஜயன், பெரியசாமி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் கலந்துகொண்டு, சூனாம்பேடு அரசு பள்ளி முன்னாள் மாணவர் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு மலரை வெளியிட, எஸ்பி விஜயகுமார் பெற்று கொண்டார். பின்னர் கலெக்டர் ராகுல்நாத் பேசுகையில், சூனாம்பேடு அரசு பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்து, கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் முன்னாள் மாணவர் பேரவை சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் சார்பில், கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி விஜயகுமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Alumni Association , Alumni Council, Special Flower, Ceremony
× RELATED 1974ல் படித்த முன்னாள் மாணவர் வழங்கினார்...