டெல்லி: இந்திய - சீன எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார்.
மேலும், தஜிகிஸ்தானின் துஷன்பே நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி - யை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் மூத்த ராணுவ தளபதிகள் இடையேயான சந்திப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜெய்சங்கர் நேரில் வாங் யி-யை சந்தித்துள்ளார்.