மதுரை: நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் எச்.ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசினார். உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசியதாக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.