×

மும்பையில் அதிகாலை முதல் பலத்த மழை... தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பை உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்தநிலையில் மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வாக பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் புனே, ரட்னகிரி, கோல்ஹாபூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மராட்டிய அரசு முடிக்கிவிட்டுள்ளது.


Tags : Mumbai , Heavy rains in Mumbai since early morning ... inundated low-lying areas: Precautionary measures intensified
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...