டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை மேலும் குறைக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய்பல்லா அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அஜய்பல்லா தெரிவித்துள்ளார்.