காஞ்சிபுரம்: சென்னைக்குள் நுழையும் காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வனப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கு அனுமதியை பெறுவதற்காக தனியே ஒருங்கிணைப்பாளர் நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.