சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு 5 நாட்களும், கேரளகடல் பகுதிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.