சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உறுப்பினர்களாக 3 பேரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, துறை ரீதியான அனுபவம் உள்ள அபுதுல் ரகுமான், ஷியா பிரிவை சேர்ந்த சுகைல் ஹைதர் கான் மற்றும் சன்னி பிரிவை சேர்ந்த பாத்திமா முசாபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.